பொள்ளாச்சியில்.,டியூசன் மாஸ்டர் செய்த கேவலமான செயல்!! விசாரணையில் வெளிவந்த ரகசியம்!!  - Seithipunal
Seithipunal


பொள்ளாச்சியை அடுத்த சேரன் நகரைச் சேர்ந்த மூர்த்தி (வயது 48 )என்பவர் மகாலிங்கபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் அருகே தனது சைக்கிளை நிறுத்தி விட்டுச் சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது அவரது சைக்கிள் களவு போய் இருந்தது.

இதுகுறித்து அவர் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதேபோல், அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் மற்றும் சீனிவாசன் ஆகியோரும் தங்களது சைக்கிளை காணவில்லை' என மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தனர்.

இந்நிலையில், போலீசார் கொட்டாம்பட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது, அவ்வழியாக வந்த இரண்டு பேரை விசாரித்து பிடித்து விசாரித்தபோது அவர்கள் அளித்த பதில் திருப்திகரமானதாக இல்லை. இதனால் போலீசார் அவர்களை தொடர்ந்து விசாரித்துள்ளனர்.

அப்பொழுது விசாரணையில் ஒருவர் பார்த்திபன்(22) பள்ளி ஆசிரியர் எனவும் மற்றொருவர் பத்தாம் வகுப்பு மாணவர் என்பதும் தெரியவந்தது. பின்னர் அதிகப்படியான அழுத்தம் கொடுத்து விசாரித்ததில் பார்த்திபன் அவருடைய மாணவரை தூண்டிவிட்டு தன்னிடம் டியூஷன் வகுப்பிற்கு வரும் மாணவர்களின் விலையுயர்ந்த சைக்கிள்களை திருடியது தெரியவந்தது.

மேலும் ஆடம்பரச் செலவு செய்ய இந்த சைக்கிளை விற்றுள்ளார் என்பதும் தெரியவந்தது. எனவே, பார்த்திபன் மற்றும் அந்த பத்தாம் வகுப்பு மாணவனை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். பின்னர் திருடிய சைக்கிள்கள்  அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A teacher theft students cycle in pollachi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->