பெருகிவரும் செல்போன் மோகம் .,தன் மீது ஆசைப்பட்டதால் மாணவியின் உயிரை குடித்த செல்போன் ..!
பெருகிவரும் செல்போன் மோகம் .,தன் மீது ஆசைப்பட்டதால் மாணவியின் உயிரை குடித்த செல்போன் ..!
தனது தந்தை செல்போன் வாங்கிக்கொடுக்காததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு பொறுமை என்பதே இல்லை. ஒரு பொருளை வாங்க ஆசைப்பட்டாலும் அதனை உடனே அடைய வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடமும் உள்ளது.மேலும் நினைத்தது கிடைக்காவிட்டால் உயிரையும் விடும் அளவிற்கு பலவீனமாக உள்ளனர்.
இந்நிலையில் தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலையை சேர்ந்த அய்யாத்துரை என்பவரது மகள் அகிலா.
இவர் தன்னுடன் படிக்கும் மாணவிகள் அனைவரும் ஸ்மார்ட்போன் வைத்திருப்பதால் தனக்கும் ஸ்மார்ட்போன் வாங்கிக்கொடுக்கும் படி, அவர் தந்தையிடம் கேட்டுள்ளார்.
மேலும் அவரது தந்தை தற்போது பணம் இல்லாததால் பணம் கிடைத்த பிறகு செல்போன் வாங்கித் தருவதாக தன் மகளிடம் கூறியுள்ளார்.
அனால் இதனை கேட்காத அகிலா, தனக்கு ஸ்மார்ட்போன் வேண்டும் ,உடனடியாக வாங்கித்தரும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த அய்யாதுரை அகிலாவிடம், நீ காலேஜுக்கெல்லாம் போகத் தேவையில்ல வீட்லயே இரு என கூறியிருக்கிறார்.
இதனால் மனமுடைந்த அகிலா, வீட்டில் யாருமில்லா நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
A student committed suicide because she did not buy a cell phone