மாணவியை கண்டித்த ஆசிரியர்., பெற்றோர்.!! விபரீத முடிவால் நேர்ந்த சோகம்.!!
மாணவியை கண்டித்த ஆசிரியர்., பெற்றோர்.!! விபரீத முடிவால் நேர்ந்த சோகம்.!!
சிவகங்கையில் உள்ள அம்மன் நகர் பகுதியை சார்ந்தவர் சிவநேசன்., இவருடைய மகளின் பெயர் சுவேதா (16). சுவேதா அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பதினோராம் வகுப்பில் பயின்று வருகிறார்.
இந்நிலையில்., பள்ளிக்கு சென்ற இவர் அலைபேசி எடுத்து சென்றுள்ளார். இதனை சோதனையின் மூலம் கண்டறிந்த ஆசிரியர்கள் உடனடியாக மாணவியின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு விஷயம் குறித்து தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் கடும் மனவிரக்திக்கு உள்ளான மாணவி பள்ளியில் மேல் தளத்திற்கு சென்று அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் படுகாயமடைந்து உயிருக்கு போராடிய அவரை கண்ட ஆசிரியர்கள் ஒரு கணம் அதிர்ந்து போகவே., உடனடியாக அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் உயிருக்கு போராடிய இவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில்., மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மதுரையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தால் பள்ளிக்கூடமும்., அந்த மாணவியின் ஊரும் பெரும் சோகத்தில் நிறைந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A STUDENT ATTEMPT SUICIDE IN SIVAKANGAI