மாணவிக்கு கழிவறையில் நேர்ந்த கொடூரம்.! தலைமறைவான தலைமையாசிரியர்.!! கொந்தளிக்கும் பெற்றோர்கள்.!!
A SEXUAL HARASSMENT IN SCHOOL HEAD MASTER
திருவள்ளூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள பிளேசபாளையத்தை சார்ந்த 14 வயதுடைய சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 9 ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் நேற்று மாலையில் பள்ளியின் உள்ளே உள்ள கழிவறைக்கு சென்றுள்ளார்.
அந்த சமயத்தில் மாணவியை பின் தொடர்ந்த அந்த பள்ளியின் தலைமையாசிரியர் பாஸ்கர் கழிவறைக்குள் சென்றுள்ளார். கழிவறையில் தலைமையாசிரியர் வந்ததை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்த மாணவி., அவரை விட்டுவிடும் படி ஆசிரியரிடம் மன்றாடி கேட்டுள்ளார்.
இவரின் பேச்சிற்கு செவி சாய்க்காத ஆசிரியர் மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியுள்ளார். மேலும்., பள்ளி முடிந்த சமயத்தில் பிற மாணவிகள் அனைவரும் இல்லத்துக்கு சென்றிருந்ததால் மாணவிக்கு நடந்த கொடுமை அந்த சமயத்தில் தெரியாமல் போனது.
இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூற கூடாது என்று அவர் கூறியதை அடுத்து., மாணவி தனது இல்லத்திற்கு சென்றுள்ளார். இல்லத்திற்கு சென்ற மாணவி பள்ளியில் தலைமையாசிரியரால் நடந்த கொடுமையை கண்ணீருடன் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோ சம்பவம் குறித்து உடனடியாக பென்னலூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இதனை அறிந்த தலைமையாசிரியர் தலைமறைவாகிவிட்டதாகவும்., அவரை தீவிரமாக காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும்., தற்போது பாலியல் தொல்லையில் சிக்கிய தலைமை ஆசிரியர் பாஸ்கர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இதே போன்ற சர்சையில் சிக்கியதன் காரணமாக பள்ளியை விட்டு மாற்றம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமையாசிரியின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
A SEXUAL HARASSMENT IN SCHOOL HEAD MASTER