இப்படியும் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர்…..! - Seithipunal
Seithipunal


 

திருநெல்வேலி மாவட்டம் புளியங்குடி அருகே மலையடிக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோட்டூர்சாமி (வயது 38) விவசாயி. சில தினங்களுக்கு முன்பு, இவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த வேன் மோதி, சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார்.

இவருக்கு, மனைவியும், மகாலட்சுமி (வயது 14), ரஞ்சித்குமார் (வயது 12), கார்த்திகா (வயது 7) ஆகிய 3 குழந்தைகள் உள்ளன. மிகவும், ஏழ்மையான குடும்பம். கோட்டூர்சாமி விபத்தில் இறந்ததால், குழந்தைகள் அனைவரும் பள்ளிக்கு கூட செல்ல இயலாமல் மிகவும் சிரமப் பட்டனர்.

இதனை அறிந்த, புளியங்குடி காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வரும், ஆடிவேல், இந்த 3 குழந்தைகளையும் தத்து எடுத்து, அவர்களது படிப்புச் செலவுகளை ஏற்பதாக உறுதி அளித்துள்ளார்.

இந்த தகவல், தற்போது சமூக வலைத் தலங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இன்ஸ்பெக்டர் ஆடிவேலுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இவர் ஏற்கனவே, பல ஏழைக் குழந்தைகளின் படிப்பைச் செலவை, ஏற்றுக் கொண்டு, தொடர்ந்து, இதனை ஒரு சேவையாக செய்து வருகிறார், என்பது குறிப்பிடத் தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a role model police Inspector


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->