கர்ப்பிணி பெண் தீக்குளித்த சோகம்.! பிறந்த குழந்தையும் இறந்ததால் கண்ணீரில் உறவினர்கள்.!!
a pregnant lady attempt suicide by fire
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் சீர்காழியை அடுத்துள்ள தொடுவாய் சுனாமி நகரை சார்ந்தவர் உதயகுமார். இவர் மீனவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவியின் பெயர் சகுந்தலா வள்ளி (26).
இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து 8 வருடங்கள் ஆகும் நிலையில்., ரோகித் என்ற 6 வயதுடைய மகனும்., ரசித் என்ற 2 வயதுடைய மகனும் உள்ளனர். இந்நிலையில்., தற்போது 8 மாத கர்ப்பிணியாக சகுந்தலா வள்ளி இருக்கிறார்.
இவர்களின் இல்லத்திற்கு வருகை தந்த சகுந்தலா வள்ளியின் மாமியார் அவரிடம் பேசிக்கொண்டு இருந்தார். இவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருக்கும் போதே இவர்கள் இருவருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளனர் சகுந்தலா விரக்தியில் இருந்துள்ளார்.
வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார். தீயின் தாக்கம் தாங்காமல் கதறித்துடித்த இவரின் குரலை கேட்டு பதறியபடி இல்லத்திற்குள் சென்ற அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டனர்.
தீயகத்துடன் உடல் கருகிய நிலையில் அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் திருவாரூர் மருத்துவமனையில் அனுமதி செய்தனர்., இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவருக்கு சிகிச்சை அழிக்கப்படுவதை உறுதி செய்தனர்.
மேலும்., இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சகுந்தலா வள்ளியின் உறவினர்கள் மருத்துவமனையில் கூடியதால் அந்த பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது. இந்த நிலையில்., பிரசவ வலியால் கதறித்துடித்த அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு மருத்துவர்கள் குழந்தையை வெளியே எடுத்தனர். குழந்தையானது இறந்து பிறந்ததால் உறவினர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
a pregnant lady attempt suicide by fire