மது பழக்கத்திற்கு ஆளான கணவன்., கர்ப்பிணி என்றும் பாராமல் செய்த அவலம்.!! தண்டவாளத்தில் கருவில் இருந்த குழந்தையோடு செய்த காரியம்.!!
மது பழக்கத்திற்கு ஆளான கணவன்., கர்ப்பிணி என்றும் பாராமல் செய்த அவலம்.!! தண்டவாளத்தில் கருவில் இருந்த குழந்தையோடு செய்த காரியம்.!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னத்தடாகம் பகுதியை சார்ந்தவர் செல்வராஜ்., இவரது மகளின் பெயர் மகேஸ்வரி (27). மகேஸ்வரிக்கும் சின்னியம்பாளையத்தை சார்ந்த கட்டிட தொழிலாளியான தனபால் (வயது 32) என்பவருக்கும் சென்ற இரண்டரை வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தை இருக்கும் பட்சத்தில்., தற்போது மகேஸ்வரி நிறைமாத கர்ப்பிணி ஆவார்.
கணவனுக்கும் மனைவிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு இருந்துள்ளது. மேலும் தனபாலுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததன் காரணமாக., தினமும் மது அருந்திவிட்டு மனைவியை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். ஒரு சமயத்திற்கு மேலாக பொறுக்க இயலாத மகேஸ்வரி., விஷயம் குறித்து கோயம்புத்தூரில் உள்ள மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் நிலையத்தில் இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் கணவன் மற்றும் மனைவியை அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்தார்.
இவர்கள் இருவரையும் மகேஸ்வரியின் பெற்றோர் சின்னத்தடாகம் பகுதியில் வாடகை வீடு எடுத்து இருவரையும் குடியமர்த்தினர். இந்நிலையில்., காவல் நிலையத்தில் புகார் அளித்த கோபத்தில் இருந்த தனபால்., தனது மாமனார் இல்லத்திற்கு சென்று வருவதை தவிர்த்துள்ளார். மேலும் மகேஸ்வரி மட்டும் அடிக்கடி குழந்தையை அழைத்து கொண்டு தாயாரின் இல்லத்திற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில்., கர்ப்பிணி என்றும் பாராமல் தனது மனைவியை தகாத வார்த்தைகளை கூறி பேசி., வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல தனது பழைய சேட்டைகளை துவங்கியுள்ளார். இன்னும் 15 நாட்கள் இருந்தால் குழந்தை பிறந்துவிடும் என்ற பட்சத்தில்., இந்த உலகத்தில் உயிர் வாழ்வதற்கு பதிலாக இறந்துவிடலாம் என்று நினைத்துள்ளார். அதன் படி அங்குள்ள இரத்தனபுரி பகுதிக்கு தனது கைக்குழந்தை மற்றும் வயிற்றில் இருக்கும் குழந்தையுடன் இரயில்வே தண்டவாளத்திற்கு வந்துள்ளார்.
அந்த சமயத்தில் அந்த பாதையில் வந்த பெங்களூர் முதல் எர்ணாகுளம் வரை செல்லும் அதிவிரைவு இரயிலில் விழுந்து தனது ஒன்றரை வயது குழந்தையும்., கருவில் இருந்த குழந்தையின் உயிரையும்., தனது உயிரையும் மாய்த்து கொண்டார். இரயில் அதிவேகத்தில் வந்ததில் சம்பவ இடத்திலேயே மூவரும் உடல் சிதறி பலியானார்கள். இந்த சோக சம்பவத்தில் மகேஸ்வரியின் வயிற்றில் இருந்த குழந்தை பரிதாபக உயிரிழந்தது. அந்த குழந்தை ஆண் குழந்தை..
இவர்களின் பிரேதத்தை பார்த்த உறவினர்கள் மூவரின் உடலையும் பார்த்து கதறித்துடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும்., இந்த தற்கொலைக்கு தனபால் தான் காரணம் என்று மகேஸ்வரியின் தாயார் தெரிவித்ததை அடுத்து., சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A PREGNANT LADY ATTEMPT SUICIDE