தவறான சிகிச்சையால் நேர்ந்த சோகம்.!! கர்ப்பிணி பெண்., பிறந்த குழந்தை பரிதாப பலி.!!
A PREGNANT LADY AND HER NEW BORN BABY DIED WRONG TREATMENT BY DOCTORS
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பொள்ளாச்சி - கேரளா மாநிலத்தின் பாலக்காடு பெருமாள் பட்டியை சார்ந்தவர் க்ரிஷ்குமார் (30)., இவருடைய மனைவியின் பெயர் சினி (வயது 25). இவர்கள் இருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்த நிலையில்., தற்போது இவர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார்.
இந்நிலையில்., இவர் பாலக்காட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதி செய்யப்பட்டார். இவருக்கு கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக பெண் குழந்தையானது பிறந்தது.
குழந்தை பிறந்தாலும் தாயும் சேயும் ஆபத்தான நிலைமையில் இருப்பதால்., மருத்துவமனையின் மருத்துவர்கள் திருச்சூரில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லக்கூறி பரிந்துரைத்துள்ளனர்.
இதனை கேட்டு உடனடியாக சம்மதம் தெரிவித்த குடும்பத்தார்கள் நேற்று அவசர ஊர்தியின் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் சினியின் உறவினர்கள் சிலர் அவருக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில்., அவசர ஊர்தியில் அழைத்து செல்லும் போதே இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும்., இவர்களின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருச்சூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்., பிரேத பரிசோதனையில் தவற சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது என்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
English Summary
A PREGNANT LADY AND HER NEW BORN BABY DIED WRONG TREATMENT BY DOCTORS