காதல் திருமணம் செய்ய பெற்றோர் மறுத்து விட்டதால், போலீஸ்காரர் எடுத்த விபரீதமான முடிவு…! காதலர் தின சோகம்…!
a police man taken a wrong decision
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 27) இவர், பழனியில் உள்ள பட்டாலியனில், போலீசாகப் பணி புரிந்து வருகிறார்.
இவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். அந்தக் காதலியிடம், காதலர் தினத்தன்று, நம் திருமண செய்தியை உனக்குப் பரிசாகத் தருவேன், என்று கூறி உள்ளார்.
பின், விடுமுறை எடுத்துக் கொண்டு, தன் சொந்த ஊருக்குச் சென்ற சதீஷ், தன் காதல் விவகாரத்தை, தன் பெற்றோரிடம் கூறி உள்ளார். தான் காதலித்த பெண்ணையே, திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி உள்ளார்.
ஆனால், அவரது காதலை, சதீசின் பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை. கடுமையாக எதிர்த்தனர். அதனால், மனம் உடைந்த சதீஷ், யாருடனும் பேசாமல், சோகமாக இருந்தார்.
பின் இரவில், வீட்டிற்குள் சென்று தாழிட்டுக் கொண்டு, துாக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார். காலையில், சதீசின் அறைக் கதவு திறக்காததால், பெற்றோர் தட்டிப் பார்த்தனர். பதில் இல்லாததால், கதவை உடைத்துக் கொண்டு உள்ளே பார்தத போது, சதீஷ் துாக்கில் பிணமாகத் தொங்கியைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அழுது புலம்பினர்.
இது குறித்து, உசிலம்பட்டி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையே. சதீசின் உறவினர்கள், சதீஷ் வேலை செய்யும் இடத்தில், அவருக்கு அதிகாரிகள், பணிச் சுமையை அதிகம் வழங்கி டார்ச்சர் செய்ததாகவும் கூறி உள்ளனர்.
போலீசார், இந்தக் கோணத்திலும் விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
a police man taken a wrong decision