ஸ்ரீபெரும்புதூரில் போலீஸ்காரர் அடித்து கொலை.! பரபரப்பு.!!
ஸ்ரீபெரும்புதூரில் போலீஸ்காரர் அடித்து கொலை.! பரபரப்பு.!!
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் மோகன்ராஜ் (40). இவரின் சொந்த ஊர் வேலூர் மாவட்டம் பொய்கை கிராமம். மோகன்ராஜுக்கு அன்பு ரோஜா என்ற மனைவியும், அஸ்வின் என்ற மகனும், அவினாசி, அஜயா என்ற மகள்களும் உள்ளனர்.
பணியில் சேர்ந்து 1 வாரமே மோகன்ராஜ் அந்த பகுதியிலேயே ஒரு அறை எடுத்து தங்கி உள்ளார். இந்நிலையில், சுங்குவார் சத்திரம் திருமங்கலம் கருப்புகை பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் காவலர் மோகன்ராஜ் இறந்து கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார் சத்திரம் போலீசார், மற்றும் டி.எஸ்.பி{பொறுப்பு}, ஆய்வாளர் விசாரணை நடத்தினர். இதில், அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. அவரை மர்ம ஆசாமிகள் தலையில் அடித்தும் மதுபாட்டிலை உடைத்து கழுத்தில் குத்தியும் கொலை செய்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து, மோப்ப நாய் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, சுமார் 1 கி.மீட்டர் தூரம் ஓடி நின்றது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து. பின் அவரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
English Summary
a police man attacked and killed