வீட்டுக்கு அடியில் கோடிக்கணக்கில் புதையல்..! குறிச்சொன்ன பெரியவர்..!! செய்வினையை சட்டி விட்டு பித்தலாட்டம்..!!!  - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் வசித்து வருபவர் செல்வம். இவர் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.

இவர் சில மாதங்களுக்கு முன்பாக சின்னத்துரை என்ற பூசாரியிடம் அருள் வாக்கு கேட்டுள்ளார். இந்த சின்னத்துரை, துாத்துக்குடி சாலையில் உள்ள பந்தல்குடி அருகே உள்ள, சுடலைமாடன் ஐகோர்ட் மஹாராஜா கோயிலில் பூசாரியாக உள்ளார்.

இந்தக் கோயில் பிரபலமானது. இந்தக் கோயிலுக்கு, பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இதனைப் பயன் படுத்தி, அந்தக் கோயில் பூசாரி சின்னத்துரை, பக்தர்களுக்கு, அருள்வாக்கு, மற்றும் குறி சொல்லி வந்திருக்கிறார்.

அப்படித் தான், காரியாபட்டியிலிருந்த செல்வமும், சுடலைமாடன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்த போது, சின்னத்துரை செல்வத்திடம், “உன் வீட்டில் பூமிக்குள் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான புதையல் இருக்கிறது, என்று பிட்டைப் போட்டுள்ளார்.

இதைக் கேட்டு செல்வம் மிகுந்த மகிழ்ச்சியுடன், மீண்டும் பூசாரி சின்னத்துரையிடம் அந்தப் புதையலை எடுத்துத் தரச் சொல்லிக் கேட்டுள்ளார்.

அதற்கு, சின்னத்துரை, அதற்கு, பூமியில் புதையலைப் பாதுகாத்து வரும் பூதங்களுக்கு, பரிகார பூஜை நடத்த வேண்டும். அதற்கு 2 லட்ச ரூபாய் செலவாகும் என்று சொல்லி உள்ளார்.

செல்வமும், 1.70 லட்சம் வரை, பூசாரிக்கு பணம் கொடுத்துள்ளார். ஆனால், பல மாதங்கள் ஆகியும், சின்னத்துரை, புதையலை எடுத்துக் கொடுக்கவில்லை. 

இதனால், செல்வம், தான் கொடுத்த பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். அதற்கு, பூசாரி, செல்வத்தின் மேல், ஏவலை ஏவி விடுவதாக மிரட்டி உள்ளார். 

இதனால், கடுப்பான செல்வம், காரியாபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், விசாரணை செய்த போலீசார், பூசாரி சின்னத்துரையைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a old man robber in fake information


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->