"நான் என் நண்பனை கொன்றுவிட்டேன்" போலீசில் சரணடைந்த இளைஞர் கூறிய அதிர்ச்சி காரணம்!!  - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள எப்போதும்வென்றான் ஊர் அருகில் உள்ள கண்ணங்கட்டை கிராமத்தைச் சேர்ந்த வேலவன் என்பவர் (22)  தூத்துக்குடியில் லோடு ஆட்டோ ஓட்டி வருகின்றார். 

தாளமுத்துநகர் அருகில் உள்ள வண்ணார்பேட்டையைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 22) என்பவருடன் வேலவன் நண்பராக பழகி வந்துள்ளார். இந்நிலையில், தாய்நகர் அருகில் உள்ள உப்பளப் பகுதியில்வேலுவனும், கண்ணனும் ஒன்றாக சேர்ந்து மது அருந்தி வந்துள்ளார்கள்.

அப்போது, மதுபோதையில் இருந்த வேலவன், கண்ணனின் தாயைப் பற்றி அவதூராகப் பேச இதனால் ஆத்திரமடைந்த கண்ணன், வேலவனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளார். 

பின்னர் இன்று தனது தாயாரை பற்றி தவறாக பேசியதால் ஆத்திரத்தில் கொலை செய்ததாக ஒப்பகொண்ட கண்ணன் போலீஸில் சரண் அடைந்துள்ளார். 

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தாளமுத்துநகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A murder in thuthukudi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->