தந்தையின் இறுதி சடங்கில் மகனும் பலி.. தாய்க்கு அதிர்ச்சி.!  - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் இறந்த  வீட்டில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் உள்ளவர்களை சோகத்தில் ஆழ்த்திருக்கிறது. 

புதுக்கோட்டை மாவட்டம் கல்லாங்குடி பகுதியைச் சார்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள்  திருமணமாகி சென்னையில் வசித்து வந்தார். இந்நிலையில், உடல்நல குறைவு காரணமாக ஆறுமுகம் மரணம் அடைந்துள்ளார். அவருடைய இறுதிச் சடங்கிற்காக மகள் தனது கணவர் மற்றும்  இரண்டு பிள்ளைகளுடன் தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். 

அவரது இறுதிச் சடங்கை முடித்துவிட்டு குடும்பத்தினர் வீடு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டு கொடியில் காய வைக்கப்பட்டிருந்த துணிகளை லெனின் என்பவர் எடுத்துள்ளார். துணியை எடுக்கும் போது அவரை மின்சாரம் தாக்கியிருக்கிறது. இதனைக் கண்ட அவரது தங்கை ஜான்சிராணி என்பவர் காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது மின்சாரம் அவரையும் தாக்கியதால் இருவரது அலறல் சத்தம் கேட்டு வந்த 13 வயது சிறுவனையும்  மின்சாரம் தாக்கியுள்ளதாக தெரிகிறது.

இந்த சம்பவத்தில் மின்சாரம் தாக்கிய 13 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். படுகாயம் அடைந்த ஜான்சி மற்றும் லெனின் ஆகியோர்  மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இறந்த வீட்டில் மின்சார விபத்து நடந்து 13 வயது சிறுவன் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தந்தையின் இறுதி சடங்கிற்காக வந்த இடத்தில் தனது 13 வயது சிறுவனை பலி கொடுத்த தாயின் அழுகை காண்போரை  கண்கலங்கச் செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a mother lost his son to an electric shock during her father funeral


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->