குழந்தையை கொடூர கொலை செய்து நாடகமாடிய தாய்.! வாக்குமூலத்தில் ஆடிப்போன காவல்துறையினர்.!!
குழந்தையை கொடூர கொலை செய்து நாடகமாடிய தாய்.! வாக்குமூலத்தில் ஆடிப்போன காவல்துறையினர்.!!
சென்னையில் உள்ள காசிமேடு சிங்காரவேலன் நகரை சார்ந்தவர் சத்யராஜ். இவர் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் செலஸ்டின் (23)., இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 3 வருடங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவருக்கும் நிஷாந்தி என்ற ஒன்றரை வயதுடைய பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில்., செலஸ்டின் மீண்டும் கர்ப்பமடைந்த நிலையில் கடந்த மாதம் பெண் குழந்தையை பிரசவித்தார். அந்த பெண் குழந்தை கடந்த 12 ம் தேதியன்று பாலூட்டும் போது இறந்ததாக கூறினார். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., குழந்தையின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குழந்தையின் பிரேதத்தை சோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை மூச்சு திணறலால் இறக்கவில்லை., குழந்தையின் பின் தலையில் அடிபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த காவல் துறையினர் உடனடியாக குழந்தையின் தாயான செலஸ்டினிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அவர் குழந்தையை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார்.
அந்த விசாரணையில்., எனது கணவரான சத்தியராஜுடன் வேளச்சேரியில் பணியாற்றிய போது அவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருப்பது., அவர்கள் இருவருக்கும் 3 வயதுடைய குழந்தை இருப்பதும் தெரியவந்தது. மேலும் அதனை மறைத்து என்னை திருமணம் செய்து கொண்டு எனது வாழ்க்கையை சீரழித்துவிட்டார்.
ஏற்கனவே., பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாமல் தவித்து வந்த நிலையில்., இந்த குழந்தையை வளர்க்க என்ன செய்யப்போகிறோம் என்று சிந்தித்து., அந்த குழந்தை வளர்ந்து பெரும் துன்பத்திற்கு ஆளாவதை விட., இப்போதே இறந்துவிட்டால் பின்னாளில் கஷ்டப்படாது என்று மனதை கல்லாக மாற்றி குழந்தையின் காலை பிடித்து தரையில் ஓங்கி அடித்தேன். \
தரையில் அடித்ததில்., குழந்தையின் பின் தலையில் அடிபட்டு துடிதுடித்து சிறிது நேரத்தில் உயிரிழந்தது. குழந்தை உயிரிழந்த பின்னர் ஒன்றும் தெரியாதது போலவே குழந்தையை தொட்டிலில் போட்டு குழந்தை பால்குடிக்கும் போது மூச்சு திணறி உயிரிழந்ததாக தெரிவித்தேன் என்று தெரிவித்தார்.
இவரை கைது செய்த காவல் துறையினர் செலஸ்டின் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையிலடைத்தனர்.
English Summary
A MOTHER KILLED HER CHILD