குழந்தையை கிணற்றில் வீசிவிட்டு., மைவைத்தார் போல் நாடகமாடிய கொடூர தாயின் விசாரணையில் வெளியாகும் தகவல்.!! - Seithipunal
Seithipunal


 

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை தாலுகா தேவையூர் நடுத்தெருவை சார்ந்தவர் பிச்சைபிள்ளை. இவரது மனைவியின் பெயர் கோவிந்தம்மாள் (30)., இவர்கள் இருவருக்கும் 6 வயதுடைய ரஞ்சிதா என்ற மகளும்., 3 மாத கைக்குழந்தையான பிரினித்தா என்ற மகளும் இருக்கிறார். துபாயில் கூலித்தொழிலாளியாக பிச்சைபிள்ளை பணியாற்றி வருகிறார். 

இவரது மூத்த மகள் ரஞ்சிதா அங்குள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில்., நேற்று கைக்குழந்தை பிரினிதாவிற்கு வெள்ளி கொலுசு வாங்குவதற்கு பெரம்பலூர் சென்ற இவர்., பெரம்பலூர் பழைய பேருந்து நிறுத்தத்தில் சுயநினைவின்றி மயக்கத்தில் இருந்துள்ளார். இதனை கவனித்த அவரது ஊரார்கள் உடனடியாக அவரின் முகத்தில் தண்ணீரை அடித்து அவரை மயக்கத்தில் இருந்து தெளியவைத்தனர். 

மயக்கத்தில் இருந்து அவர் தெளிந்ததும் சம்பவம் குறித்து கேட்டறிந்த போது அவர் தெரிவித்ததாவது., தனது கைக்குழந்தைக்கு வெள்ளி கொலுசு வாங்குவதற்காக வந்தேன்., என்ன நடந்ததென்று தெரியவில்லை. மேலும்., நான் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மற்றும் விலையுயர்ந்த அலைபேசி ஆகியவற்றை காணவில்லை என்றும்., குழந்தையும் எங்கு உள்ளது என்று தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். 

இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற கோவிந்தம்மாளின் புகாரை காவல் துறையினர் ஏற்க மறுத்ததாக தெரிகிறது., இதனை அறிந்த கோவிந்தம்மாளின் உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிடவே., புகாரை பெற்ற காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில்., பேருந்தில் தன்னுடன் பயணித்த பெண் ஒருவர் தன் மீது மயக்க மருந்தை தெளித்து., தன்னிடம் இருந்த பணம் மற்றும் தனது குழந்தையை கடத்தி சென்றுவிட்டதாக கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவமானது ஊர் முழுக்க பரவவே., பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் துறையினர் மேற்கொண்ட தொடர் விசாரணையில் அவரது பேச்சில் சற்று மாற்றம் இருப்பதை கவனித்துள்ளனர். 

இதனால் சந்தேகமடைந்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் தெரியவந்தது. இதனை கேட்டவுடன் ஒருகணம் அதிர்ந்துபோன காவல் துறையினர் மற்றும் உறவினர்கள்., கோவிந்தம்மாளை கண்டு பெரும் கவலைக்கும் ஆத்திரத்திற்கும் உள்ளாகினர். 

மேலும்., இந்த சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொண்ட போது., தனது கணவரான பிச்சைபிள்ளை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். இதன் காரணமாக எனது மகளை சரிவர கவனிக்க இயலவில்லை. தனது இரண்டாவது மகளை கொலை செய்துவிட முடிவு செய்து., எனது மூத்த மகளை வீட்டிலேயே விட்டுவிட்டு பின்னர் பெரம்பலூருக்கு புறப்பட்டேன். 

பெரும்பலூருக்கு அருகில் உள்ள வாடிகண்டபுரம் பகுதிக்கு சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இருந்த கிணற்றில் குழந்தையை வீசிவிட்டு குழந்தை இறந்ததை உறுதி செய்துவிட்டு அங்கிருந்து பின்னர் மீண்டும் பெரம்பலூர் புறப்பட்டேன். எனது உறவினர்களுக்கு எந்தவிதமான சந்தேகமும் ஏற்படாத வகையில்., நடந்து கொண்டாலும் தற்போது காவல் துறையினரின் விசாரணையில் குற்றத்தை ஒப்பு கொண்டேன் என்று கூறினார். 

குழந்தை வீசப்பட்ட கிணற்றை கண்டறிந்த காவல் துறையினர்., தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் குழந்தையின் பிரேதத்தை மீட்டனர். கோவிந்தம்மாளின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A MOTHER KILLED HER BABY


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->