கோடநாட்டு விவகாரத்தில் தான் நிரபராதி என்பதை நிரூபிக்க, எடப்பாடி நெருப்பிலும் குதிப்பார்…!- அமைச்சரின் பகீர் பேட்டி….! - Seithipunal
Seithipunal


 

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் இலவச நாட்டுக் கோழிக் குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி விருதுநகர் மாவட்டம் சாத்துாரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட,  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, நிருபர்களிடம் கூறியதாவது-

“சென்னை தலைமைச் செயலகத்தில், துணை முதல்வர், ஓ.பி.எஸ். யாகம் எதுவும் நடத்தவில்லை. சாமி தான் கும்பிட்டார். சாமி கும்பிடுவது ஒரு குற்றமா?

அதே போல், கோடநாடு விவகாரத்தில், தேவையில்லாத குற்றச்சாட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது சுமத்தப் பட்டுள்ளது.

விரைவில் அவர், தன் மீதுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து மீண்டு வருவார். தான் நிரபராதி என்பதை நிரூபிக்க, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, நெருப்பிலும் குதிப்பார், கடலிலும் இறங்குவார்”

அதிமுக ஆதரவில்லாமல், யாரும் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது, என்று அமைச்சர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a minister statement in favour of Tamil Nadu C.M.


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->