திருநெல்வேலியில்., மனைவியை விட்டுவிட்டு கொழுந்தியாளை கரம் பிடித்த கணவன்.! ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்த மச்சான்.!!
a man killed in day time rush area in thirunelveli
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையை அடுத்துள்ள ரெட்டியார்பட்டி பெருமாள்சிவன் கோவில் பகுதியை சார்ந்தவர் முத்து (35)., இவர் வர்ணம் பூசும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
மேலப்பாளையம் அருகிலுள்ள அமுதா நகரை சார்ந்தவர் மாரிச்செல்வி (வயது 29)., இவர்கள் இருவருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இடையே இருந்த கருது வேறுபாட்டின் காரணமாக கணவரை பிரிந்த மாரிச்செல்வி தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றுவிட்டார்.
இந்நிலையில்., மாரிச்செல்வியின் தங்கையான ரேவதிக்கும் முத்துவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது., இந்த பழக்கமானது இவர்கள் இருவருக்கும் இடையே காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த சில வாரத்திற்கு முன்னதாக மனைவி உயிருடன் இருக்கும் போதே கொழுந்தியாளை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிக்கு அருகிலுள்ள மேலப்பாளையத்தில் உள்ள பகுதியில் வீட்டில் வசித்து வந்த நிலையில்., காலையில் வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது மோட்டார் வாகனத்தில் புறப்பட்டார்.
அந்த சமயத்தில்., வீட்டில் இருந்து சில தூரம் சென்றபிறகு சாலையின் எதிரே முதல் மனைவி மாரிச்செல்வி மற்றும் அவரது தம்பி மணிகண்டன் ஆகியோர் அவர்களின் மோட்டார் வாகனத்தில் வந்து கொண்டு இருந்தனர்.
இவர்களை கண்டதும் அதிர்ச்சியடைந்த முத்து உடனடியாக வாகனத்தை திருப்பி தப்பித்து செல்ல முயற்சித்த போது எதிர்பாராத விதமாக வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார்., இவர் கீழே விழுந்ததை கவனித்த மணிகண்டன் உடனடியாக தான் வைத்திருந்த அரிவாளை எடுத்தார்.
இதனை கவனித்த அவர் பதறிய படி ஓட்டம் பிடிக்கவே., அவரை துரத்தி அரிவாளால் சரமாரியாக வெட்டவே தலை., கழுத்து மற்றும் கைகளில் பலத்த வெட்டுக்காயத்துடன் இரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை வெட்டி கொலை செய்த அவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினர். வெட்டுக்காயத்துடன் துடிதுடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நடைபெற்ற கொலையானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவே., உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் முத்துவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கிய காவல் துறையினர் உடனடியாக வெளியூருக்கு தப்பிச்செல்ல முயன்ற மணிகண்டனை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
a man killed in day time rush area in thirunelveli