செந்தூர்., பாதையாத்திரை சென்ற நபருக்கு நேர்ந்த சோகம்.! விபத்தை ஏற்படுத்திவிட்டு சிட்டாக பறந்த கார் ஓட்டுநர்.!!  - Seithipunal
Seithipunal


மதுரை மாவட்டத்தில் உள்ள பங்களா பகுதியை சார்ந்தவர் பிச்சை மணி (55)., இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பாதையாத்திரை குழுவுடன் திருச்செந்தூருக்கு சென்று கொண்டு இருந்தார். 

இவர்களின் பாதயாத்திரை கூட்டத்தில் உள்ள அனைவரும் முன்னாள் சென்று கொண்டு இருக்கும் போது., இவர் பின்னால் மெதுவாக நடந்து வந்து கொண்டு இருந்துள்ளார். 

அந்த நேரத்தில் சாலையில் அதிவேகமாக வந்த வாகனம் மோதி., விபத்தை ஏற்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. இவரின் குரலை கேட்ட சக பக்தர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்த்த போது., அவர் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார். 

இதனை கண்ட அவர்கள் உடனடியாக திருச்செந்தூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., பிச்சை மணியின் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்., சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a man died by accident


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->