12 வயது சிறுமியை... 11 இளைஞர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம்..! வடமாநிலத்தை மிஞ்சிய கோவை சம்பவம்..!!
12 வயது சிறுமியை... 11 இளைஞர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம்..! வடமாநிலத்தை மிஞ்சிய கோவை சம்பவம்..!!
வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான கூட்டு பலாத்கார சம்பவங்கள் அதிகம் நடந்து வந்த வேலையில், தற்போது கோவை நடந்துள்ள சம்பவம் தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே உள்ள அட்டப்பாடி நரசிமுத்து கிராமத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இந்துஜா அவரது பெற்றோருக்கு தெரிவிக்காமல் கடந்த 19-ந்தேதி ''ஊதிவழி'' வனக்கோவில் திருவிழாவுக்கு அழைத்து சென்றுள்ளார்.
இதனை அறியாத பெற்றோர் அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் மகளை கண்டு பிடிக்க முடியவில்லை. உடனடியாக அச்சிறுமியின் பெற்றோர் 'அகழி' காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில், இது குறித்து அருகில் உள்ள சோலையூர் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து, சோலையூர் காவல்நிலைய போலீசார் நேற்று ''ஊதிவழி'' கோவில் விழாவை கண்காணிக்க சென்றனர். போகும் வழியில் ஒரு குடிசை ஒன்றில், இந்துஜாவுடன் சிறுமி இருந்ததை கண்டு, இந்துஜாவிடம் இருந்து சிறுமியை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
சிறுமியை விசாரணை செய்ததில் உயிரை உறைய வைக்கும் திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதன்படி, சிறுமியை இந்துஜா கடத்தி வந்து அங்குள்ள ௧௧ வாலிபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு பாலியல் வன்புணர்வுக்கு அனுப்பியுள்ளார்.
போலீசார் அந்த சிறுமியை அட்டப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமியை கூட்டாக சேர்ந்து பலர் பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்திருப்பதாக கூறி அதிர்ச்சியளித்தனர்.
இதனையடுத்து போலீசார் இந்துஜாவை கைது செய்து விசாரணை செய்து, அந்த சிறுமியை பலாத்காரம் செய்த ரதீஷ் (20), அரவிந்த் (21), ஈஸ்வரன் (22) வீனஸ்ராஜ் (20), மணிகண்டன் (20), சிவக்குமார் (23), குமார் (23), ராஜேஸ் (25), குமார் (25), சுதீஷ், ஆகிய 11 பேரையும் சோலையூர் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இளம்பெண் இந்துஜா உள்பட 12 பேரின் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, மன்னார்காட்டில் உள்ள எஸ்.சி., எஸ்.டி. நீதிமன்றத்திற்கு ஒப்படைக்க செல்லும் வழியில் காவலரை தாக்கிவிட்டு வீனஸ்ராஜ் என்பவன் தப்பி ஓடிவிட்டான். மீதம் உள்ள 11 பேரை மட்டும் நீதிமன்றத்தில் போலீசார் ஒப்படைத்துள்ளனர். தப்பி ஓடியவனை போலீசார் தேடி வருகின்றனர்.
English Summary
A LITTLE GIRL SEXUAL ABUSE IN 11 PERSONS