முறைதவறிய உறவு.! கணவன் இரக்கத்தால் வாயடைத்த மனைவி., மனது நொந்து செய்த காரியம்.!!
A LADY ATTEMPT SUICIDE
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் கட்டுமாங்கோடு ஆசாரி விளையை சார்ந்தவர் சாந்தகுமார். இவரது மனைவியின் பெயர் சைனி (26). சைனி நேற்று அவரது இல்லத்தில் திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை அறிந்த சைனியின் தாயார் வல்சலா சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்து., விசாரணை மேற்கொள்ள கூறியிருந்தார். இதனை அறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சைனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., சைனி மற்றும் அவரது கணவர் சந்தகுமாருக்கு கடந்த 2012 ம் வருடம் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்கள் இருவருக்கும் மூன்று ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்நிலையில்., சைனிக்கும் கணவர் சந்தகுமாரின் உறவினர் பையனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்கள் இருவருக்கும் இடையே முறைதவறிய பழக்கமாக மாறியுள்ளது.
இந்த பழக்கத்தை அங்குள்ள உறவினர்கள் அறிந்தவுடன் அவரை ஏளனமாக பேசியுள்ளனர். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான சைனி கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த கணவர் அந்த சமயத்தில் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற வைத்து காப்பாற்றினார். சிகிச்சைக்கு பின்னர் தனது கணவரிடம் முகம் காட்டவே விருப்பமில்லாத அவரை சமாதானம் செய்து கணவர் இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
இந்நிலையில்., கடுமையான மனவிரக்தியில் இருந்து வந்த அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்தது. மேலும்., இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணையில் காவல் துறையினரும் வட்டாட்சியரும் ஈடுபட்டு வருகின்றனர்.