சேலத்துல சமூக விரோதியை கைது செய்யும் முன்..! துணை முதல்வரின் சொந்த ஊர் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்க சார்..!! - Seithipunal
Seithipunal


துணை முதல்வரின் சொந்த ஊரில், பெண்ணைக் கத்தியால் குத்தி 7 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

துணை முதல்வரின் சொந்த ஊரான, தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை ஸ்டேட் பேங்க் காலனியைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவியின் பெயர் மணிமாலா (வயது 36)

நேற்று, மணிமாலா, தன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, ஒரு மர்ம நபர் வீட்டின் கதவைத் தட்டி உள்ளார். கதவைத் திறந்த மணிமாலாவிடம், அந்த நபர், “பேப்பர் வேண்டுமா?” என்று கேட்டுள்ளார்.

அதற்கு, மணிமாலா, பேப்பர் வேண்டாம், என்று கூறி உள்ளார். இதனை அடுத்து, குடிக்க தண்ணீர் தருமாறு, அந்த நபர் கேட்டுள்ளார். இதனால், மணிமாலா வீட்டிற்குள் சென்று தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக, அந்த நபர், மணிமாலாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியைப் பறிக்க முயன்றார். ஆனால், மணிமாலா அதனைத் தடுத்து, அந்த நபருடன் போராடினார்.

இதனை அடுத்து, மணிமாலாவை வீட்டின் உள்ளே தள்ளி விட்டு, அந்த வாலிபர், பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, மணிமாலாவின், கழுத்து, கன்னம், கை உள்ளிட்ட இடங்களில் சராமரியாகக் குத்தினார்.

பின், மணிமாலாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, அந்த வாலிபர் ஓடி விட்டார். மணிமாலாவின் அலறல் சத்தம் கேட்டு, ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், அவரைப் பெரியகுளம் அரசு மருத்துவமைனையில் அனுமதித்தனர்.

துணை முதல்வரின் சொந்த ஊரிலேயே, பெண்களுக்கு பாதுகாப்பில்லை, என்று அங்கிருந்தவர்கள் புலம்பிக் கொண்டிருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A LADY ATTEMPT MURDER FOR GOLD CHAIN


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->