கள்ளக்காதலுக்கு கேட் போட்ட கணவன்.! கேட்டை திறக்க ஆயில் ஊற்றிய கொடூரம்.!! வெளியான தகவலால் அதிர்ந்துபோன காவலர்கள்.!!
கள்ளக்காதலுக்கு கேட் போட்ட கணவன்.! கேட்டை திறக்க ஆயில் ஊற்றிய கொடூரம்.!! வெளியான தகவலால் அதிர்ந்துபோன காவலர்கள்.!!
தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையத்திற்கு அருகேயுள்ள சுருளிப்பட்டி கிராமத்தை சார்ந்தவர் ஈஸ்வரன் (27). இவர் கனரக வாகனத்தின் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் கலைமணி (வயது 19).
இவர்கள் இருவருக்கும் சென்ற 3 மாதங்களுக்கு முன்னர் திருமணம் முடிந்த நிலையில்., இவர்களுக்கு ஒன்றரை வயதுடைய குழந்தை உள்ளது. இந்நிலையில்., சென்ற மாதத்தின் 8 ம் தேதியன்று ஈஸ்வரன் தீடீரென உயிரிழக்கவே., உறவுங்களிடம் அதிக குடிப்பழக்கம் இருந்ததன் காரணமாக உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் குழந்தையை அவரது மாமனாரின் வீட்டில் விட்டுவிட்டு அதே பகுதியை சார்ந்த அழகர்சாமி (26) என்ற வாலிபருடன் சுற்றி திரிந்து வந்துள்ளார். இதனை கண்டு விஷயம் குறித்து அக்கம் பக்கத்தினர் ஈஸ்வரனின் தந்தைக்கு தகவல் வழங்கினர்.
தகவலை அறிந்த ஈஸ்வரனின் தந்தை தர்மர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு., மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர்., விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.
அந்த விசாரணையில்., அழகர்சாமிக்கும் எனக்கும் இருந்த கள்ளத்தொடர்புக்கு இடையூறாக கணவர் இருந்து வந்ததால் உணவில் விஷம் வைத்து கொலை செய்ததாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கலைமணி மற்றும் அழகர்சாமியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
A ILLEGAL AFFAIR WIFE KILLED HER HUSBAND