குடிகார கணவனை வீட்டிற்குள் விட்டதற்கு இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க வைத்த கோரம்.!! அதிர்ந்து போன அக்கம்பக்கம்.!! - Seithipunal
Seithipunal


 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கே.வி.ஆர் நகரை சார்ந்தவர் மூர்த்தி., இவருடைய மனைவியின் பெயர் கோமதி (30). இவர்கள் இருவருக்கும் ஒரு மகனும்., ஒரு மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள செல்வம் நகரில் உள்ள பிரின்டிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். 

மூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால்., தினமும் வேலைக்கு சென்றுவிட்டு மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான கோமதி., கோபமடைந்து குழந்தைகளை அழைத்து கொண்டு தனது தாயின் இல்லத்திற்கு சென்றுவிட்டார். 

சில நாட்கள் கழித்த பின்னர் தான் திருந்திவிட்டதாக கூறி மனம் வருத்தியுள்ளார். தனது கணவர் மீண்டும் மனம் திருந்தி வந்துவிட்டார் என்று நினைத்த கோமதி தாயாரின் இல்லத்திலேயே இருக்க வைத்துள்ளார். 

இந்நிலையில்., சில நாட்கள் மது அருந்தாமல் இருந்த மூர்த்தி நேற்று வழக்கம்போல மதுவருந்தி வந்துவிட்டு மனைவியை உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். மது அருந்தி வந்ததன் காரணமாக கடும் கோபத்தில் இருந்த கோமதிக்கும் மூர்த்திக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதன் காரணமாக இருவருக்கும் இடையே அதிகளவு கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் ஆத்திரமடைந்த மூர்த்தி மனைவியை கத்தியால் குத்தினார். மகளின் அபய குரலை கேட்டு அதிர்ச்சியடைந்த கோமதியின் தாயார் சென்று மகளை காப்பாற்ற நினைக்கையில்., அவரும் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இவர்களின் அபய குரலை கவனித்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் நுழைந்து பார்க்கையில் இருவரும் இரத்த வெள்ளத்தில் மிதந்தந்தை கண்டு பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். மேலும் அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே கோமதி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும்., கோமதியின் தயாரான ஜோதிக்கு மருத்துவமனையில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவான மூர்த்தியை வலைவீசி தேடி வந்த நிலையில்., காலையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A HUSBAND KILLED HER WIFE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->