திருமணம் முடிந்த 12 நாட்கள்.!! கதறியழுத மனைவி., வாய்திறக்காத கணவன்.!! நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் மூவேந்தர் நகரை சார்ந்தவர் மணி (24)., வெளிநாட்டில் பணியாற்றி வந்த இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சொந்த ஊருக்கு வந்தார். அந்த சமயத்தில் இவரின் பெற்றோர் இவருக்கு திருமணம் முடித்து வைக்க நினைத்து ஏற்பாடு செய்திருந்தனர். 

அதன் படி அதே பகுதியை சார்ந்த இவர்களின் உறவினர் பெண்ணான உஷா (29) என்பவருக்கு கடந்த 12 நாட்களுக்கு முன்னர் திருமணம் நடத்தி வைத்துள்ளார். இவர்கள் இருவரும் தங்களின் குடும்ப வாழ்க்கையை துவங்கி 12 நாட்களே ஆகும் நிலையில்., நேற்று உஷா தனது தாயாரின் இல்லத்திற்கு சென்றிருந்தார். 

அந்த சமயத்தில் வீட்டில் இருந்த மணிக்கு திடீரென உடல்நலக் குறைபாடு எற்பட்டதன் காரணமாக., மணியின் உறவினர்கள் அங்குள்ள மருத்துவமனைக்கு அவசர அவசரமாக அழைத்து சென்றனர். மருத்துவமனையில் மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்தை அறிந்த மணியின் மனைவி கதறியழுத சம்பவமானது அங்கு இருந்த மக்களையும்., அவரின் உறவினர்களையும் பெரும் சோகத்தில் ஆலித்தியது. மேலும்., இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

திருமணம் முடிந்த 12 நாட்களிலேயே மனைவியை தவிக்க விட்டு விண்ணுலகம் சென்ற வாலிபரின் உடலுக்கு அந்த பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.   


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A HUSBAND DIED IN AFTER MARRIAGE 12 DAYS


கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்திருப்பது யாருக்கு லாபம்?




Seithipunal
--> -->