இராசபாளையத்தில்., திருமணம் முடிந்த ஐந்து மாதம்.! கணவன் எடுத்த அதிரடி முடிவால் ஆடிப்போன உறவினர்கள்., கதறியலும் மனைவி.!! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராசபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு மலையடிப்பட்டி எம்.ஜி.ஆர் நகரை சார்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகனின் பெயர் கவிராஜன் (29)., பி.காம் பட்டதாரியான இவர் மல்டி மீடியா அனிமேஷன் துறையில் பயின்று., சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வந்தார். 

இந்நிலையில்., இவருக்கும் தென்காசி சாலையில் உள்ள தேவதானம் ஊரை சார்ந்த முனீஸ்வரி என்பவருக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னதாக திருமணம் செய்து வைக்கப்பட்டது. திருமணத்தில் தனக்கு விருப்பமில்லை என்று கூறியும்., பெற்றோர்களின் தொடர் வற்புறுத்தல் காரணமாக திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட கவிராஜன் திருமணம் செய்து கொண்டார். 

தனது பெற்றோர்களின் வற்புறுத்தலாலேயே திருமணம் செய்து கொண்டேன்., என்று தனது மனைவியிடம் அடிக்கடி கூறி வந்த இவர்., நேற்றிரவு அலுவலகத்தில் பணி இருப்பதன் காரணமாக இரவு பணிக்கு சென்று காலையில் வருகிறேன் என்று கூறிவிட்டு தனது அலுவலகத்திற்கு சென்றுள்ளார். 

காலையில் நீண்ட நேரம் ஆகியும்., அலைபேசியில் தொடர்பு கொண்டும் எந்த விதமான பதிலும் இல்லாததால்., அதிர்ச்சியடைந்த மனைவி உறவினர்களுக்கு தகவலை தெரிவித்து அலுவலகத்திற்கு சென்று பார்த்துவிட்டு வருமாறு தெரிவித்துள்ளார். 

இந்நிலையில்., அலுவலகத்திற்கு சென்ற உறவினர்கள் அலுவலகத்தின் வாயில் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது., கவிராஜன் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனையக சம்பவம் குறித்து இராசபாளையம் வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கவிராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்., சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a husband attempt suicide in rajapalayam for not interest in marriage life before and after marriage


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->