திருப்பூரில்., ஆடுகளை காரில் கடத்தி செல்ல சினிமா பணியில் பிளான்.! மடக்கிப்பிடித்த கிராமமக்கள் நையப்புடைத்ததால் பரபரப்பு.!!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சென்னிமலைக்கு அருகில் உள்ள கிராமத்தை சார்ந்தவர் ராஜன். இவர் அங்குள்ள பகுதியில் தேநீர் கடையை நடத்தி வருகிறார். மேலும்., அவரது இல்லத்தில் 5 ம் மேற்பட்ட வெள்ளாடுகளை வளர்த்து அதனை பராமரித்து வருகிறார். 

இந்நிலையில்., இன்று காலையில் இவர் ஆடுகளை கட்டியிருக்கும் இடத்தில் 3 ஆடுகளின் எண்ணிக்கை குறைந்தும்., அந்த பகுதியில் கார் ஒன்று நிற்பதையும் கண்டு சந்தேகமடைந்தார். 

சந்தேகமடைந்த அவர் காருக்கு அருகில் சென்று சோதிக்கையில்., காரின் உள்ளே அந்த மூன்று ஆடுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காரின் உள்ளே இருந்த இரண்டு மர்ம நபர்களிடம் கேட்க முயற்சித்த போது அவர்கள் காரை எடுத்துக்கொண்டு தப்பிக்க முயற்சித்து வேகமாக புறப்பட்டுள்ளனர். 

இதனை உடனடியாக கிராம மக்களுக்கு தெரிவிக்கவே., ஒன்று திரண்ட கிராம மக்கள் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி சினிமா பணியில் அவர்களை பிடித்து அடித்து நொறுக்கினர். 

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a goat thief is stopped by village Peoples in thirupur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->