கடலூர் மாமியாரின் வீட்டிற்கு சென்று., இளம்பெண்ணை சீரழித்த கொடூரன்.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள காந்தல்வாடி கிராமத்தை சார்ந்தவர் பரசுராமன் (28)., டிராக்டர் ஓட்டுநராக பணியாற்றி வரும் இவருக்கு திருமணம் முடிந்துவிட்டது. 

பரசுராமனின் மாமியார் இல்லமானது கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ரூட்டி அருகேயுள்ள கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்திற்கு அடிக்கடி பணிக்காக சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். 

அந்த சமயத்தில்., அந்த கிராமத்தை சார்ந்த கனிமொழி (வயது 26) என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. இந்த அறிமுகமானது சில நாட்கள் கழித்த பின்னர் இருவருக்கும் இடையே காதலாக மலரவே., காதலர்கள் இருவரும் பலமுறை தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். 

இதன் காரணமாக கனிமொழி கர்ப்பமடைந்துள்ளார். பரசுராமனுக்கு திருமணம் முடிந்ததை அறியாத கனிமொழி அவரிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளார். இவர் கர்ப்பமடைந்துள்ளதை அறிந்த பரசுராமன் அதிர்ச்சியடையவே., கனிமொழியுடன் பேசுவதை குறைத்துள்ளார்.

இதனால் பரசுராமனின் மீது சந்தேகம் அடைந்த கனிமொழி சம்பவம் குறித்து பண்ருட்டியில் உள்ள அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு பரசுராமனை கைது செய்து சிறையிலடைத்தனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A GIRL RAPPED IN VILUPURAM


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->