கோயம்புத்தூரில்., பெற்ற மகளை தனது சகோதரர்களுடன் பலவந்தப்படுத்திய தந்தை.! காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை.!!
a girl rapped by her father and his brothers in kovai
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்குபாளையத்தில் அரசு உதவி பெரும் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பிப்பது எப்படி? என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியானது குழந்தைகள் நல மையத்தின் சார்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன் படி குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்., அதன் படி மாணவிகள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து கூற வேண்டும் என்று அதிகாரி தெரிவித்து மாணவிகளுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.
அந்த சமயத்தில் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவர் தனது தந்தை மற்றும் அவர்களின் சகோதரர்கள் (சித்தப்பா) மூலமாக அவர் அனுபவித்து வந்த பாலியல் பலாத்கார கொடுமைகளை அவர்களிடம் கூறி கதறியழுதார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக சம்பவம் குறித்து அங்குள்ள செல்வபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்., இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவியின் தந்தை மற்றும் சித்தப்பாக்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்களை உடனடியாக கைது செய்வதற்காக புறப்பட்ட காவல் துறையினர் மனைவியின் தந்தை மற்றும் ஒரு சித்தப்பாவை கைது செய்தனர்., மற்றொரு சித்தப்பா தப்பியோடினர். அவரை தீவிரமாக காவல் துறையினர் தேடி வந்த நிலையில்., இன்று அவரை அதிரடியாக கைது செய்தனர்.
English Summary
a girl rapped by her father and his brothers in kovai