புதுச்சேரியில் கொடூரம்.! இரண்டு நாட்களில் அடுத்தடுத்து பெண்கள் கற்பழித்து கொலை.!! வெளியான அதிர்ச்சி தகவல்.!! - Seithipunal
Seithipunal


புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கருவடி குப்பத்திற்கு அருகில் உள்ள தமிழக பகுதிக்கு உட்பட எல்லை பகுதியை சார்ந்த இடங்களில் ஏராளமான மனைகள் காலியாக உள்ளன. இந்த காலி இடங்களில் இறைச்சிகள் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 

இந்நிலையில்., இன்று காலையில் பன்றி மேய்ப்பவர்கள் அந்த வழியாக செல்லும் போது., பெண்ணின் உடலானது கை மற்றும் கால்களில் பாலிதீன் பையால் கட்டப்பட்ட நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அந்த பாலிதீன் கவரை பிரித்து பார்க்கையில்., 50 வயதுடைய பெண்ணாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். மேலும்., அவரது முகம் மற்றும் கை - கால்களில் காயங்கள் இருப்பதை கவனித்தனர். 

அந்த பெண்ணின் உடலை மீட்ட அவர்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்., இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இறந்து கிடைக்கும் பெண் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? கற்பழித்து இந்த கொலையானது செய்யப்பட்டு இந்த இடத்தில் பிணத்தை வீசி சென்றனரா? என்பது குறித்து வைஸ்ராய் மேற்கொண்டு வருகின்றனர்.  

மேலும்., புதுவையில் உள்ள கோட்டக்குப்பம் பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்து கடந்த நிலையில்., கற்பழித்து பெண் ஒருவரை கொலை செய்து இரண்டு நாட்களே ஆகும் நிலையில்., இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a girl rapped and killed in pondichery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->