திருமணம் செய்யக்கூறி காலில் விழுந்து கதறிய காதலி.! காதலன் செய்த கொடூரம்.!! விசாரணையில் அதிர்ந்து போன காவலர்கள்.!! - Seithipunal
Seithipunal


 

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறைக்கு அருகில் உள்ள மீனச்சல் பாட்டத்துவிளை பகுதியை சார்ந்தவர் ஸ்ரீஜா (23). இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 19 ம் தேதியன்று பணிக்கு சென்ற ஸ்ரீஜா., பணி முடிந்தும் வீட்டிற்கு வரவில்லை. 

இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் மகள் நீண்ட நேரம் ஆகியும் இல்லத்திற்கு வராததால்., அவரின் தோழிகளிடம் கேட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு தெரிந்த இடங்களுக்கு சென்று கேட்டுள்ளனர். எங்கு தேடியும் அவரை காணாததால்., பதட்டமடைந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். இந்நிலையில்., குழித்துறையில் உள்ள ஆற்றில் பெண்ணின் பிணம் கிடப்பதாக அங்குள்ள மக்கள் 21 ம் தேதியன்று காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி., பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர்.  

அப்போது ஸ்ரீஜா என்ற பெண் மாயமானது தெரியவந்தது., இதனை அடிப்படையாக கொண்டு ஸ்ரீஜாவின் பெற்றோரை அழைத்து வந்து பெண்ணின் உடலை கட்டிப்போட்டு அது தனது மகள் என்று பெற்றோர்கள் கதறி அழுதனர். 

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கிய காவல் துறையினர்., அப்போது மருத்துவமனையில் இருந்து வந்த முடிவுகளின் படி ஸ்ரீஜா 5 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. 

இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் ஸ்ரீஜாவின் அலைபேசி எண்ணை அறிந்து அதில் இருந்த அழைப்புகளை சோதனை செய்த பொது., அவர் நித்திரவிளையை  அடுத்துள்ள எஸ்.மாங்காடு பகுதியை சார்ந்த பிபின் (வயது 26) என்பவரிடம் பேசிவந்தது தெரியவந்தது. 

இது குறித்து ஸ்ரீஜாவின் தோழிகளிடம் விசாரித்த போது., இருவரும் காதலித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து பிபினை தொடர்புகொள்ள முயற்சித்த போது அவர் தலைமறைவானது தெரியவந்தது. உடனடியாக பிபினை தீவிரமாக தேடி நேற்று அதிகாலையில் கைது செய்தனர். 

பிபினை கைது செய்த காவல் துறையினர்., காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மருத்துவமனையில் பணியாற்றும் ஸ்ரீஜாவுடன் மருத்துவமனைக்கு வந்துசென்ற போது பழக்கம் ஏற்பட்டது. 

எங்களுக்குள் ஏற்பட்ட பழக்கமானது., பின்னாளில் காதலாக மலர்ந்ததன் மூலமாக இருவரும் காதலித்து வந்தோம். அப்போது அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம். சிறிது நாட்கள் கழித்த உடன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தோம். 

இதனால் ஸ்ரீஜா கர்ப்பமடைந்தாள். இது பற்றி அவர் என்னிடம் கூறிய போது, அதிர்ச்சியடைந்த நான் மருத்துவமனைக்கு அழைத்து சென்று மேற்கொண்ட சோதனையில்., அவள் கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக என்னை திருமணம் செய்யக்கூறி வற்புறுத்தினர். 

திருமணத்திற்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து., இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் சிறிது சமாதானமடைந்து மருத்துவமனைக்கு சென்று கருவை கலைக்க முயற்சியுள்ளனர். ஆனால்., ஸ்ரீஜா 5 மாத கர்ப்பிணியாக இருந்ததன் காரணமாக கருவை கலைக்க கூடாதென்று மருத்துவர்கள் கூறியதால் செய்வதறியாது திகைத்துள்ளனர். 

இந்நிலையில்., மீண்டும் திருமணம் செய்யக்கூறி ஸ்ரீஜா பிபினை வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நான்., ஸ்ரீஜாவை குழித்துறை ஆற்றுப்பாலத்திற்கு அழைத்து வந்து அவரை பாலத்தில் இருந்து கீழே தள்ளி விட்டேன்., ஆற்றில் விழுந்த அவர் நீரில் முழ்ங்கி உயிரிழந்தார். இதனையடுத்து நான் தலைமறைவாகிவிட்டேன்., இருந்தாலும் காவல் துறையினர் என்னை கண்டுபிடித்து கைது செய்துவிட்டனர் என்று தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A GIRL KILLED BY HER LOVER IN KANNIYAKUMARI


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->