உளுந்தூர்பேட்டையில் பயங்கரம்.! பட்ட பகலில் மாணவியை கடத்தி சென்ற ஆட்டோ ஓட்டுநர்., நடந்த கொடூரம்!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை பகுதியை சார்ந்த 17 வயதாகும்
மாணவி அங்குள்ள எலவனாசூர்கோட்டை பகுதியில் இருக்கும் 12 ம் வகுப்பில் பயின்று வருகிறார். ஆங்கில புத்தாண்டுக்கு புதிய ஆடைகள் வாங்க முடிவு செய்த மாணவி ஆடைகளை வாங்கிவிட்டு தனது இல்லத்திற்கு ஆட்டோவின் மூலமாக புறப்பட்டுள்ளார்.

மாணவி பயணம் செய்த ஆட்டோவானது வழக்கமான வழியில் செல்லாமல் மற்றும் வழியில் சென்றுள்ளதை கவனித்த மாணவி., ஆட்டோவை நிறுத்தும் படி கூறியுள்ளார்., மாணவியின் பேச்சை கேட்டும் கேட்காதது போல நடித்த ஆட்டோ ஓட்டுனரை கண்டு மாணவி சந்தேகமடைந்துள்ளார். 

மேலும்., பல முறை ஆட்டோவை நிறுத்த கூறியும் அவர் நிறுத்தாமல் சத்தம் போட்டால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்., இதனால் பயந்து போன மாணவி எலவனாசூர்கோட்டை புறவழிச்சாலை சந்திப்பில் ஆட்டோ செல்லும் போது ஆட்டோவில் இருந்து கீழே குதித்துள்ளார். 

இதனால் படுகாயமடடைந்த நிலையில் இருந்த மாணவியை கவனித்த அந்த சாலையின் வழியாக வந்த மக்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவனைக்கு அவசர ஊர்தியின் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தனர்.

இந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மாணவிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அழிக்கப்படுவதை உறுதி செய்த பின்னர் மாணவியிடம் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். 

அந்த விசாரணையில் மாணவி ஆட்டோ ஓட்டுநர் தன்னை கடத்தி செல்ல முயற்சித்ததை கூறவே., உடனடியாக சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள துவங்கினர். அந்த விசாரணையில்., ஆட்டோ ஓட்டுநரான புகைப்பட்டி பகுதியை சார்ந்த கிருஷ்ணனின் மகன் மணிகண்டன் (25) என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A GIRL KIDNAPPED IN VILUPURAM DISTRICT


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->