மதுகேட்டு தொல்லைக் கொடுத்ததால் மண்டையை பிளந்த உயிர் நண்பன்.!! செந்துறை அருகே பரிதாபம்.!! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகேயுள்ள செந்துறை பெரியாக்குறிச்சி கிராமத்தை சார்ந்தவர் பரமசிவம். இவரது மகனின் பெயர் கோவிந்தசாமி (29). கடந்த 24 ம் தேதியன்று இரவு ஜெயங்கொண்டத்தில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் உள்ள இராங்கியம் கிராமத்திற்கு அருகில் தலையில் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் இருந்தார். 

இதனை கண்ட அந்தப்பகுதி வாசிகள் சம்பவம் குறித்து ஆண்டிமடம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் கோவிந்தசாமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இந்நிலையில்., மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி 25 ம் தேதியன்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த வந்தனர். 

அந்த சமயத்தில் கோவிந்தசாமியின் தந்தை பரமசிவம் காவல் நிலையத்தில் தனது மகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும்., இது குறித்து அதே பகுதியை சார்ந்த வேணுகோபாலின் மகன் வேல்முருகன் (வயது 26) என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளுமாறும் புகார் தெரிவித்தார். 

இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் வேல்முருகனிடம் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் சம்பவத்தன்று கோவிந்தசாமி தனது நண்பரான வேல்முருகனிடம் மது வாங்கி கொடுக்க சொல்லியுள்ளார். 

இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதமானது அதிகரிக்கவே., பொறுமையிழந்த வேல்முருகன் தனது நண்பரான கோவிந்தசாமியின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதனால் பலத்த காயமடைந்த நிலையில் இருந்த நண்பன் குறித்த தகவல்களை காவல் துறையினருக்கு தெரிவித்துவிட்டு., பின்னர் சம்பவம் குறித்து குடும்பத்தாருக்கும் தகவல் தெரிவித்துவிட்டு பின்னர் தலைமறைவாகியுள்ளார். 

கோவிந்தசாமியின் தந்தை பரமசிவம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து தற்போது காவல் துறையினரின் விசாரணையில் சிக்கிக்கொண்டதாகவும் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a friend killed her fiend for not buying hot drinks.


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->