தொண்டையில் முள்ளு சிக்கலாம்..! உயிர் உள்ள மீன் சிக்குனா என்ன ஆகும்..?! இதான் நடக்கும்..!! விழுப்புரத்தில் நடந்த பரிதாபம்..!!!
தொண்டையில் முள்ளு சிக்கலாம்..! உயிர் உள்ள மீன் சிக்குனா என்ன ஆகும்..?! இதான் நடக்கும்..!! விழுப்புரத்தில் நடந்த பரிதாபம்..!!!
நான் மீன் சமைத்து சாப்பிடும் போது, தொண்டையில் முள் சிக்கி படாத பாடு படுகிறோம், ஆனால் ஒருவர் மீன் பிடிக்க சென்று, தொண்டையில் சிக்கி உயிரை விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள அருங்குறிக்கை என்ற கிராமத்தின் அருகே தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அருங்குறிக்கை கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை என்பவர் தனது ஊரின் அருகிலுள்ள சித்தலிங்கமடம் கிராமத்தின் ஏரிக்கு மீன் பிடிக்க சென்றார்.
அவரின் மீன் பிடிக்கும் தூண்டிலில் ஒரு மீன் சிக்கியது. தொண்டில் முள்ளில் சிக்கிய மீனை எடுக்க முயன்று போது மீன் அவர் கையில் வரவில்லை. பொறுமை இழந்த அவர் மீனை வாயால் கவ்விப்பிடித்து கொண்டு, தூண்டில் முள்ளில் சிக்கிய மீனை விடுவிக்க முயன்றார்.
அப்போது, வாயில் கவ்வி இருந்த மீன், அண்ணாமலை விழுங்கிவிட்டார். அந்த மீன் தொண்டையில் சிக்கி கொண்டது. இதனால் அண்ணாமலைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதனை கண்ட அருகில் இருந்தோர், அவரை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
ஆனால், தொண்டையில் சிக்கிய மீனை மருத்துவர்கள் எடுக்கும் முன்னே அண்ணாமலை உயிர் இழந்தார். இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அம்மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
a fisher man death in shocking incident