தாயார் ஊருக்கு சென்ற நேரத்தில்., தந்தையால் மகளுக்கு நேர்ந்த சோகம்.!!  - Seithipunal
Seithipunal


 

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்திற்கு அருகில் உள்ள காந்திநகரை சார்ந்தவர் பட்டு ராஜா (33)., இவர் 11 வயதுடைய சிறுமியை வளர்ப்பு மகளாக தனது இல்லத்தில் வளர்த்து வந்தார். 

ராஜாவின் மனைவி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வெளியூருக்கு சென்ற காரணத்தால்., பட்டு இராஜாவும் அவரது மகளும் இல்லத்தில் இருந்துள்ளனர். அந்த சமயத்தில் சிறுமியை பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளார். 

இதனால் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளான சிறுமி., விஷயம் குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து., அங்குள்ள தொன் போஸ்கோ அன்பு இல்லத்தில் சேர்ந்தனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு., இராஜாவின் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர். மேலும்., வளர்ப்பு மகளை தந்தையே கற்பழித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும்., சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A FATHER RAPPED HER DAUGHTER WHEN HIS NOT IN HOME


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->