தந்தையால் மகள்களுக்கு நேர்ந்த கொடூரம்.!! குடும்பத்தகராறில் விபரீதம்.!!
தந்தையால் மகள்களுக்கு நேர்ந்த கொடூரம்.!! குடும்பத்தகராறில் விபரீதம்.!!
கோயம்புத்தூர் மாவட்டம் மசக்காளிபாளையத்தில் உள்ள பழனிக்கோனார் வீதியை சார்ந்தவர் பத்மநாபன் (46)., இவருடைய மனைவியின் பெயர் செல்வராணி (வயது 38). இவர்கள் இருவருக்கும் 15 வயதுடைய ஹேமாவர்ஷினி என்ற மகளும்., 8 வயதுடைய ஸ்ரீஜா என்ற மகளும் உள்ளார்கள்.
அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஹேமாவர்ஷினி 10 ம் வகுப்பும், ஸ்ரீஜா 3 ம் வகுப்பும் பயின்று வருகின்றனர். கோயம்புத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பத்மநாபனின் மனைவிக்கு சில வருடங்களுக்கு முன்னதாக வலிப்பு நோய் ஏற்பட்டது.
இதன் காரணமாக செல்வராணியின் தாயார் வீட்டிற்கு வந்து சமையல் செய்து கொடுத்து., குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்வார். இந்நிலையில்., பத்மநாபனுக்கு அதிகளவில் கடன் இருந்ததன் காரணமாக கடனை அடைப்பதற்கு அவரது தாயாரிடம் பணம் வாங்கித்தரகோரி முறையிட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் அடிக்கடி நடக்கும் வாக்குவாதத்தை குறைப்பதாக கூறி மது போதைக்கும் பழக்கமாகியுள்ளார். இந்நிலையில்., இன்று காலை வழக்கம்போல இன்று காலையில் சமையல் செய்ய வந்த செல்வராணியின் தாயார் பிரேமா காலை 6.30 மணியளவில் குழந்தைகளை பார்த்துள்ளார்.
English Summary
A FATHER KILLED HER TWO DAUGHTER IN KOVAI