கோவையில்., பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை.! மதுவால் நேர்ந்த சோகம்., கோவை மத்திய சிறை.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயத்தை சார்ந்தவர் 34 வயதுடைய நபர். இவருக்கு மனைவி ஒருவர் இருக்கிறார். இவர்கள் இருவருக்கும் 8 வயதுடைய மகள் ஒருவர் இருக்கிறார். இவர் அங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். 

கார் ஓட்டுநராக பணியாற்றி வரும் நபர் மது அருந்தும் பழக்கத்தை வைத்துள்ளார். இதனால் தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வரும் இவர் தனது மகளுக்கு பாலியல் ரீதியிலான தொல்லைகளை கொடுத்து வந்துள்ளார். 

இந்நிலையில்., நேற்றும் அதிகளவு மது அருந்திவிட்டு இல்லத்திற்கு வந்த அவர்., மது போதையில் தனது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் பயந்து போன சிறுமி தனது தாயாரிடம் தனக்கு நடக்கும் பிரச்சனைகள் குறித்து கூறியழுதார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாயார் விஷயம் குறித்து காங்கேயம் மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இவரது புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a father gives sexual harassment his daughter


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->