விழுப்புரத்தில்., முன்விரோதத்தில் விவசாயியை ஆபாசமாக பேசிய ஒரு தரப்பினர்.! மனமுடைந்த விவசாயிக்கு நேர்ந்த சோகம்.!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திருநாவலூர் அருகேயுள்ள பெரும்பாக்கம் காலனியை சார்ந்தவர் சந்திரசேகர். அதே பகுதியை சார்ந்தவர் சாமிக்கண்ணு (75)., இவர் விவசாயியாக பணியாற்றி வருகிறார். 

சந்திரசேகருக்கும் - சாமிகண்ணுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில்., சந்திரசேகர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் மீண்டும் இவர்களுக்குள் முன்விரோதம் ஆரம்பித்துள்ளது. 

இந்நிலையில்., நேற்று மாலையளவில் சந்திரசேகரின் குடும்பத்தார் விரோதத்தை மனதில் வைத்து கொண்டு சாமிக்கண்ணுவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்., இவர்கள் இருவரின் தகராறும் முற்றவே அவதூறாக பேசி மற்றும் தாக்கியுள்ளனர். 

இந்த பிரச்சனைகள் நிறைவடைந்ததும் தனது இல்லத்திற்குள் சென்ற சாமிக்கண்ணுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதை கவனித்த குடும்பத்தார்கள் உடனடியாக அவரை உளுந்தூர்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர்., இதனை அறிந்த சமிக்கண்ணுவின் குடும்பத்தார் கதறியளவே., சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

மேலும்., அந்த புகாரில் இருவரின் குடும்பத்திற்கும் இடையே இருந்த முன்விரோதத்தின் காரணமாக எனது தந்தையை அடித்து கொலை செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a farmer died in fight on neighbor hood problem


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->