பிரபல தேமுதிக நிர்வாகி வெட்டி கொலை!! பாடி அருகே பரபரப்பு!!  - Seithipunal
Seithipunal


பாடி முல்லை நகரைச் சேர்ந்த பாண்டியன் என்பவர், தேமுதிக பிரமுகரான இவர் பொறியாளர் பிரிவில் தேமுதிகவில் பதவியில் உள்ளார். இதற்கு முன்பு சட்டப்பேரவை தேர்தலில் வில்லிவாக்கம் தொகுதியில் அவர் போட்டியிட்டுள்ளார்.

கட்டிட காண்டிராக்டர் ஆன இவர் ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வருகிறார். அண்ணாநகரில் உள்ள பள்ளியில் தனது மகனை விட்டு விட்டு காலை 9 மணியளவில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டு இருந்துள்ளார். 

அப்போது குமரன் நகர் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை அருகே பாண்டியன் தனது புல்லட்டில் சென்று கொண்டு இருந்துள்ளார். அப்போது 6 பேர் கொண்ட மர்ம நபர்கள் சேர்ந்த கும்பல் அவரை சுற்றி வளைத்துள்ளது.

அவர்கள் கையில் பயங்கரமான ஆயுதங்கள் இருந்ததாக தெரிகிறது. இதனை பார்த்து பாண்டியன் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றுள்ளார். ஆனால், அந்த மர்ம நபர்கள் 6 பேரும் அவரை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டியுள்ளனர்.

இதனால் அவரது தலை, முகம், கை, கால்களில் வெட்டுப்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. இதனால், பாண்டியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்த விசாரணையில் பாண்டியனுக்கும் அங்கிருக்கும் சிலருக்கும் வியாபார ரீதியாக சிக்கல்கள் இருந்தது தெரியவந்துள்ளது.

மேலும், நேற்று இரவு செல்போனில் வாக்குவாதத்தில் பாண்டியன் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A dmdk politician murdered in paadi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->