ஒரு பெண் செய்த விநோதமான மோசடி ….! இப்படியும் நடக்குமா?
ஒரு பெண் செய்த விநோதமான மோசடி ….! இப்படியும் நடக்குமா?
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்தவர் மலர்விழி. இவரது கணவர் ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார்.
மலர்விழி ஒரு தனியார் நிதி நிறுவனத்தில், அலுவலராகப் பணியாற்றி வந்தார். அந்த நிதி நிறுவனத்திற்கு, மங்கையர்க்கரசி என்ற பெண், வாடிக்கையாளராக வந்துள்ளார். நாளடைவில், அவர் மலர்விழியிடம் நட்பாகப் பழகினார்.
இந்த நிலையில், மலர்விழி, “இன்னும் அதிகமான தொகைக்கு நகை வாடிக்கையாளர்கள் வந்தால், எனக்கு பதவி உயர்வு கிடைக்கும்” என்று மங்கையர்க்கரசியிடம் கூறி உள்ளார்.
அதற்கு அவர், “உன் நகைகளைக் கொடு. அதை இங்கேயே நாலு பேரை வைத்து அடகு வைத்து, பின், அந்தப் பணத்தை உனக்குத் தருகிறேன்” என்று கூறி உள்ளார்.
மலர்விழியும், மங்கையர்க்கரசியின் பேச்சை நம்பி, தன்னிடம் இருந்த 58 பவுன் நகைகளை, அவரிடம் கொடுத்துள்ளார். மங்கையர்க்கரசியும், தனக்குத் தெரிந்த நாலு பேரிடம், அந்த நகைகளைப் பிரித்துத் தந்து, அந்த நிதி நிறுவனத்திலேயே, பத்து லட்சம் ரூபாய் வரை அடகு வைத்துள்ளார்.
ஆனால், அந்தப் பணத்தை, மலர்விழியிடம் சேர்க்கவில்லை. மலர்விழி, மங்கையர்க்கரசியிடம் தன் பணத்தைக் கேட்க, அவர் தர மறுத்துள்ளார். இதற்கிடையே இந்த விவகாரம் தெரிந்து, அந்த நிதி நிறுவனம், மலர்விழியை டிஸ்மிஸ் செய்தது.
இதனால், நொந்து போன மலர்விழி, தன்னிடம் நகைகளை வாங்கி பணம் தராமல் ஏமாற்றிய மங்கையர்க்கரசி மீது, போலீசில் புகார் அளித்துள்ளார். அவர்கள், அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
English Summary
a different type of cheating by a lady