திருச்சி அருகே பயங்கரம்.! சொத்துக்காக சொந்த தங்கையின் குழந்தையை கொடூர கொலை செய்த அண்ணன்.!!
a cute baby killed by her mother's brother., for father land Property Problem in trichy
திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறியை அடுத்துள்ள சடையப்ப நகரை சார்ந்தவர் சாமிதாஸ். இவருக்கு லோகநாதன் என்ற 23 வயதுடைய மகனும்., சுபாஷினி என்ற 21 வயதுடைய மகளும் உள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்துவிட்ட நிலையில் லோகநாதன் தா.பேட்டையில் உள்ள பகுதியில் அவரது குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனக்கு வழங்க வேண்டிய சொத்தை தன்னிடம் தந்துவிடும் படி அடிக்கடி தனது தந்தையிடம் லோகநாதன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மகனின் தகராறை ஒரு சமயத்திற்கு மேலாக பொறுக்க இயலாத சாமிதாஸ் தனது மகளுடன் முசிறியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்., சம்பவத்தன்று சுபாஷினியின் இல்லத்திற்கு சென்ற லோகநாதன் சொத்து தொடர்பாக பேச்சு வளர்த்து பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.
இவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் நடைபெற்று வந்த நிலையில்., சொத்துக்காக சுபாஷினியின் ஒன்றரை வயதுடைய குழந்தையை தூக்கி தரையில் வீசியுள்ளார். இதனால் குழந்தையின் தலையில் கடுமையான காயம் ஏற்பட்ட நிலையில்., சிகிச்சைக்காக முசிறியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உடனடியாக குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கூறி ஆலோசித்துள்ளனர். மருத்துவரின் ஆலோசனைப்படி குழந்தையை திருச்சி மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில்., குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இதனை கண்ட உறவினர்கள் குழந்தையை பார்த்து கதறித்துடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மேலும்., இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் சுபாஷினி புகார் அளித்தார். இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் லோகநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
சொத்துக்காக சொந்த தங்கையின் மகளை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும்., பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
a cute baby killed by her mother's brother., for father land Property Problem in trichy