நெய்வேலியில்., காதலனால் அரங்கேறிய கொடூரம்.! கல்லூரிக்கு சென்ற மாணவியை கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை.!!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி அருகேயுள்ள ஊ.மங்களம் பகுதியை சார்ந்தவர் விஜய். நெய்வேலியில் உள்ள கல்லூரியில் மாணவி ஒருவர் பயின்று வருகிறார். 

இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் காதலாக மாறவே., இருவரும் காதலித்து வந்துள்ளனர். 

இந்நிலையில்., சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்று கொண்டு இருந்த மாணவியை தனது நண்பர்களுடன் வழிமறித்த விஜய் அங்குள்ள ஏரிக்கரைக்கு வருமாறு கூறியுள்ளார். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி., வர இயலாது என்று கூறவே தனது நண்பர்களுடன் அவரை அங்குள்ள ஏரி பகுதிக்கு கடத்தி சென்று மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும்., இந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் தெரிவித்துள்ளனர். 

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவி சம்பவம் குறித்து நெய்வேலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக வழக்குப்பதிவு செய்து மாணவியின் காதலரான விஜயை கைது செய்தனர். 

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில்., அவரது நண்பர்கள் வேல்முருகன்., முரளி மற்றும் பிரபுராஜ் ஆகியோரை கைது செய்து அவர்களின் மீது வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர். கல்லூரிக்கு சென்ற மாணவியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும்., சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a college girl kidnapped and rapped by her lover


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->