சிறுமியை நண்பனின் இல்லத்திற்கு அழைத்து சென்று பலாத்காரம்.! வலைவீசி தேடும் காவல் துறையினர்.!! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் அருகேயுள்ள சுகுணாபுரத்தை சார்ந்தவர் ரியாஸ். அதே பகுதியில் 16 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள் என்ற காரணத்தால் நட்பு வட்டாரத்துடன் பழகி வந்துள்ளனர். 

இந்நிலையில்., கடந்த 7 ம் தேதியன்று சிறுமியை ரியாஸ் அவரது நண்பரின் இல்லத்திற்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்த அவர்., அதற்கு பின்னர் தலைமறைவாகிவிட்டார். 

இந்த சம்பவம் குறித்து முதலில் வீட்டில் கூறாமல் இருந்த சிறுமி பின்னர் சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் உடனடியாக சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு., ரியாஸின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தலைமறைவான அவனை தீவிரமாக தேடி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A CHILD RAPPED IN COIMBATORE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->