சத்துணவு கூடத்திற்கு படிக்க விரைந்த 3 வயது சிறுமி.! பின்னால் வந்த டிராக்டரால் நேர்ந்த சோகம்.!!   - Seithipunal
Seithipunal


 

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் பகுதியில் உள்ள நெட்டூர் அம்மன்கோவில் தெருவை சார்ந்தவர் மகாராஜன். இவரது மகளின் பெயர் வினிதா (3). அங்குள்ள சத்துணவு கூடத்தில் பயின்று வருகிறார். 

இவரது இல்லத்தில் இருந்து சத்துணவு கூடம் அருகிலேயே இருப்பதால் அவ்வப்போது சிறுமி., சத்துணவு கூடத்திற்கு தனியாக நடந்து செல்வது வழக்கம். அதே போல்., இன்று காலையில் இவரது தாயார் பின்னால் வந்து கொண்டு இருக்கும் போது சிறுமி வேகமாக சத்துணவு கூடத்திற்கு சென்றுள்ளார். 

அப்போது சத்துணவு கூடம் பூட்டியிருந்ததை கண்டு வெளியிலேயே இருந்துள்ளார்., அந்த சமயத்தில் அங்கு டிராக்டரில் வந்த சிறுமியின் உறவினரை பார்த்த சிறுமி., அவரிடம் செல்வதற்கு மாமா என்று அழைத்து கொண்டு சென்றுள்ளார். 

அந்த சமயத்தில் இதனை கவனிக்காத உறவினர் டிராக்டரை பின்னால் எடுக்கவே., குழந்தை டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பின்னால் வந்த தாயார் கண்டு கொள்ளவே., குழந்தை துடிதுடித்து இறந்ததை கண்டு கதறியழுதார். 

மேலும்., இந்த சம்பவத்தை அறிந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் சம்பவ இடத்தில் கதறியழுதது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அவரின் உறவினரான ராஜ்குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A CHILD DIED IN ACCIDENT


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->