10 வயது சிறுமியை சீரழித்த 60 வயதுக்காரர்!! சிறுமிக்கு ஏற்பட்ட பரிதாப சம்பவத்தால் அதிர்ச்சி!!
a child abused and killed by old man in thiruvannamalai
திருவண்ணாமலை, தண்டராம்பட்டு அருகே தென்முடியனூரை சேர்ந்த விஜயகுமார்- அன்புகுமாரி தம்பதிகளுக்கு கீதா (10) மற்றும் பிரபு (8) என இரு குழந்தைகள் இருந்துள்ளனர்.
விஜயகுமார்- அன்புகுமாரி இருவரும் விவசாய கூலித்தொழிலாளி எனவே, மகள் கீதா, அதே கிராமத்தில் உள்ள அன்புகுமாரியின் தாயான பாட்டி வீட்டில் தங்கி, அங்கிருக்கும் அரசு தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில், சிறுமி கீதா அதே கிராமத்தை சேர்ந்த விவசாய கூலிதொழிலாளி கணேசன் (60) என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு அங்குள்ள கரும்புத்தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்துள்ளார். மேலும், சிறுமி அணிந்திருந்த மூக்குத்தியும் திருடப்பட்டிருந்தது.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் சிறுமியின் உடலை பார்வையிட்டனர், கீதாவின் பிறப்புறுப்பு மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்தனர்.
இதனைத்தொடர்ந்து, உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திருவண்ணாமலை எஸ்.பி. சக்கரவர்த்தி, டி.எஸ்.பி. ஹேமசித்ரா, கூடுதல் எஸ்.பி. வனிதா, தண்டராம்பட்டு இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோரும் அங்கு வந்து கீதா உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
சிறுமி உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் கொண்டு வரப்பட்டது. அது கொலை நடந்த இடத்தை மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடிச்சென்று ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தான் கணேசன் மீது குற்றம் இருப்பது தெரிய வந்தது.
English Summary
a child abused and killed by old man in thiruvannamalai