கையில் அரிவாள், கம்பை வைத்துக் கொண்டு, திருடர்களைத் துரத்திய வீரத் தமிழ்ப் பெண்…! குவியும் பாராட்டுகள்….!
a brave lady
கோவை மாவட்டம் வடக்குப் பகுதியைச் சேர்ந்த துடியலுாரைச் சேர்ந்தவர் கயல்விழி. இவர் வசித்து வந்த வீட்டின் எதிர் வீட்டில், பகலில் ஆள் இல்லாத சமயமாகப் பார்த்து, திருடர்கள் வந்துள்ளனர்.
அந்த வீட்டின் காம்பவுண்டு சுவர் வழியாக ஏறிக் குதித்து, வீட்டிற்குள் புகுந்து, பீரோவை உடைத்துக் கொண்டிருந்தனர்.
அந்த சமயம், தன் வீட்டின் வெளியே பொருத்தப் பட்டிருந்த சிசிடிவி கேமராவில், இந்தக் காட்சியைக் கண்ட கயல்விழி, உடனே, தன் கைபேசியில், எதிர் வீட்டுப் பெண்ணிடம் தொடர்பு கொண்டு, “இப்போது நீங்கள் வீட்டில் இருக்கிறீர்களா? இல்லை, வெளியே போய் விட்டீர்களா?” என்று கேட்டார்.
அதற்கு, எதிர் வீட்டுப் பெண்மணி, தாங்கள் வீட்டைப் பூட்டி விட்டு, ஊருக்கு சென்று விட்டதாகக் கூறி உள்ளார். உடனே, கயல்விழி, அவர்கள் வீட்டிற்குள் திருடர்கள் வந்த விஷயத்தைக் கூறினார்.
பிறகு, தன் வீட்டில் இருந்த, அரிவாள் மற்றும் கம்பை எடுத்துக் கொண்டு, துணிந்து சென்று, எதிர் வீட்டில் நுழைந்த திருடர்களை நோக்கி ஓடினார்.
கையில் அரிவாளுடன் தங்களைத் துரத்தி வரும் பெண்ணைக் கண்டு பயந்த அந்த திருடர்கள், தப்பித்தோம், பிழைத்தோம் என்று பயந்து, தப்பி ஓடிச் சென்று விட்டனர்.
பின், இந்த செய்தி, அக்கம் பக்கம் பரவியது. காவல் நிலையத்திற்கும் தகவல் தரப்பட்டது. அவர்கள் திருடர்களைத் தேடினர். இதே சமயம், வீரமாக, தனி ஒரு பெண்ணாக, திருடர்களை வீரமுடன் விரட்டிய கயல்விழிக்கு சமூக வலைத் தலங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.