70 வயது நிரம்பிய தம்பதியினருக்கு குழந்தை பிறந்த அதிசியம்!.
முதன்முறையாக 63 வயது பெண் ஒருவர் குழந்தை பெற்றிருப்பது மருத்துவத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த தம்பதி கிருஷ்ணா இவரின் வயது 71. இவரது மனைவி செந்தமிழ் செல்வி இவரின் வயது 63. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், இவர்கள்சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையத்தை நாடி 2 ஆண்டுகளாக பெற்று வந்தனர்.
இளந்தம்பதியினர் தற்போது குழந்தைப்பேறு இல்லாமல் சிரமப்பட்டு வரும் நிலையில், இவர்கள் குழந்தை வேண்டும் என்ற ஆசையுடனும், ஆர்வத்துடனும் இருந்துவந்துள்ளனர்.
மேலும் இவர்களின் அஆர்வத்தால் செயற்கை கருத்தரிப்பு செய்ய முடிவெடுத்து தீவிர சிகிச்சை எடுத்து வந்தனர்.
இந்நிலையில் அவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. சுமார் 3 கிலோ எடையுடன் பிறந்த இந்தக் குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மாதவிடாய் நின்ற 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதுவும் 63 வயதில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்திருப்பது தமிழகத்தில் இது முதல்முறை என்று கூறப்படுகிறது.
English Summary
A 70-year-old couple has a baby birth