3 பொண்டாட்டிக்காரர் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் உறைந்து போன மனைவிமார்கள் மற்றும் குடும்பத்தார்.!!
3 பொண்டாட்டிக்காரர் எடுத்த முடிவால் அதிர்ச்சியில் உறைந்து போன மனைவிமார்கள் மற்றும் குடும்பத்தார்.!!
தர்மபுரியை அடுத்துள்ள வேப்பிலைப்பட்டி செங்கான் நகரை சார்ந்தவர் முருகன் (50)., இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கு மொத்தம் 3 மனைவிகள்., அவர்களுக்கு மொத்தமாக 2 மகன்கள் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.
மது அருந்தும் பழக்கம் வைத்திருந்த முருகனால் அடிக்கடி குடும்பத்திற்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அந்த தகராறில் கணவரும் மனைவிமார்களும் சேர்ந்து சண்டையிடும் வழக்கத்தை வைத்துள்ளனர்.
அந்த வகையில் நேற்று வழக்கம் போல சண்டை துவங்கி நடைபெற்று கொண்டு முடிந்தது. இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்த முருகன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். உயிருக்கு போராடும் நிலையில் இவரை கண்ட மனைவிமார்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனையில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்., சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.