சென்னையில் போலீஸார் அதிரடி வேட்டை.! சிக்கிய 94 பேர் திடுக்கிடும் தகவல்.!!
சென்னையில் போலீஸார் அதிரடி வேட்டை.! சிக்கிய 94 பேர் திடுக்கிடும் தகவல்.!!
சென்னையில் கொலை, கொள்ளை, பொது மக்களிடம் வழிப்பறி என ரவுடிகளின் அராஜகம் அத்துமீறி நடந்து கொண்டிருக்கின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் வெளியில் நடமாடவே யோசிப்பதால், அவர்களின் இயல்பு வாழ்க்கையானது பாதிப்படைகிறது. இதனை தடுக்க போலீஸார் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சோழவரம் பகுதியில் ஏராளமான ரவுடிகள் பிரபல ரவுடி ஒருவரின், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, சென்னை போலீஸாரால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, நேற்று நள்ளிரவு மீஞ்சூர் பகுதியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தில்லை நடராஜன் தலைமையில் 4 டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அடங்கிய தனிப்படையினர் விடிய விடிய வாகன சோதனை நடத்தினர்
மேலும், மீஞ்சூர், பள்ளம், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுர் உள்ளிட்ட இடங்களில் ஒரே நேரத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 25-க்கும் மேற்பட்ட பெண் போலீசாரும் ஈடுபட்டனர். கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடைய ரவுடிகளை கூண்டோடு கைது செய்வதற்காகவே ‘‘ஹோம்பிங் ஆபரேஷன்’’ என்ற பெயரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 94 பேர் சிக்கினர்.
இதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அனைவரையும் ஒரே பகுதியில் உள்ள திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்களில்,13 பேர் ரவுடிகள் என்பது தெரியவந்தது. அவர்களை தனியாக பிரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ஒரு போலீஸ் அதிகாரி கூறும்போது, திருவள்ளூர் மாவட்டத்தில் ரவுடிகளை கட்டுப்படுத்த இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக்கப்படும் என்று தெரிவித்தார்.
English Summary
94 members arrested by chennai police