இதற்காகவா இப்படி? 9 ஆம் வகுப்பு மாணவியை கொலை செய்த மற்றொரு மாணவி.! வித்தியாசமான தீர்ப்பு வழங்கி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


நகைக்காக தன் பள்ளியில் படித்த  9ம் வகுப்பு மாணவியை கொலை செய்த 10 ஆம் வகுப்பு மாணவிக்கு 3  ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. 

விழுப்புரம் மாவட்டம்  திண்டிவனம் அருகே உள்ள மொளசூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவி.இவர் லாரி ஓட்டுநராக உள்ளார்.இவரது  மகள் சசிரேகா, இவர் ஓமந்தூரில் உள்ள அரசு பள்ளியில்  9-ஆம் வகுப்பு படித்து வந்தார். 

தொடர்புடைய படம்

இந்நிலையில் கடந்த 2015-ல் ஜனவரி 31 ஆம் தேதி பள்ளிக்கு சென்ற  சசிரேகா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த பெற்றோர் ஊர் முழுவதும் தேடிய நிலையில்  மொளசூர் பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் சசிரேகா சடலமாக கிடந்துள்ளார்.. 

அவரது உடலை மீட்ட கிளியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணையில் அவரது  பள்ளியிலேயே  10-ம் வகுப்பு படித்த மாணவி, சசிரேகாவின் நகைக்காக அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது. 

dead in water well க்கான பட முடிவு

மேலும் இதுதொடர்பாக விழுப்புரம் இளம் சிறார் நீதி குழுமத்தில் நடைபெற்று வந்த வழக்கில் 3 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்பட்டது. 

அதன்படி மாணவி,வரும் 10 ஆம் தேதி முதல் 6 மாதங்களுக்கு பகல் நேரங்களில் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேவை செய்ய வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 standard student killed by another student for jewells


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->