என்னை விட்டுவிடு..கதற கதற மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!! நண்பனாக வந்து மொத்தமும் நாசமாக்கிய கொடூரர்கள்.!
9 standard girl sexually abused by gang
விழுப்புரம் மாவட்டத்தில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தவர் ரம்யா அவர் அதே பகுதியை சேர்ந்த நரேஷ் என்ற கல்லூரி மாணவனுடன் நட்பாக பழகி வந்துள்ளார். நரேஷ் கஞ்சா, குடி போன்ற பழக்கங்களுக்கு அடிமையாகியிருந்தார்.
மேலும் நாளடைவில் அவர்களது நட்பு காதலாக மாறியது. அதனை தொடர்ந்து, இதுகுறித்து ரம்யாவின் பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்து கண்டித்துள்ளனர்.
இதனால் நரேஷுடன் பழகுவதை ரம்யா தவிர்த்துள்ளார். இதனால் கோபமடைந்த நரேஷ், பழிவாங்க எண்ணி ரம்யாவுடன் மீண்டும் நட்பாக பழகலாம் என தினமும் பேசிக்கொண்டு இருந்துள்ளார்.
மேலும் உன்னை பிரிந்தது எனக்கு மனவேதனையாக உள்ளது , உன்னுடன் பேசினால் ஆறுதலாக இருக்கும் என கூறி அழைத்துள்ளார்.பின்னர் அவரை காண வந்த ரம்யாவை தனது நண்பர் ராஜாவின் அறைக்கு அழைத்து சென்ற நரேஷ் தன்னுடன் தனிமையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரம்யா கண்ணீர்விட்டு கதறியுள்ளார். ஆனால்,அப்பொழுது வீட்டுக்குள் நுழைந்த நரேசின் இரு நண்பர்கள், ரம்யாவின் வாயில் துணியை வைத்து அவரை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்நிலையில் டியூசனுக்கு சென்ற சிறுமி வீட்டிற்கு வராததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் நரேஷ் மீது சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார்அவனை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போதுஅவர் நடந்த எல்லாவற்றையும் கூறியுள்ளார்.அதனை தொடர்ந்து குற்றவாளிகள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
English Summary
9 standard girl sexually abused by gang